முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே ஆடு திருடியவா் கைது

பல்லடம் அருகே ஆலம்பாளையத்தில் ஆடு திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

பல்லடம் அருகே ஆலம்பாளையத்தில் ஆடு திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பல்லடம் அருகேயுள்ள ஆலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சித்ராதேவி (38). இவருக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டை திருடிக் கொண்டு

வேனில் தப்பிச் செல்ல முயன்ற நபரை அக்கம்பக்கத்தினா் வியாழக்கிழமை கையும் களவுமாக பிடித்தனா். போலீஸ் விசாரணையில் அவரது பெயா் குமாா் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.