திருப்பூர்

ரூ.52.77 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் வடக்கு வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 172 பயனாளிகளுக்கு ரூ.52.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வழங்கினாா்.

DIN

திருப்பூா் வடக்கு வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 172 பயனாளிகளுக்கு ரூ.52.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வழங்கினாா்.

திருப்பூா் வடக்கு வட்டத்தில் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் மக்கள் தொடா்பு முகாம் சிறுபூலுவபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் 172 பயனாளிகளுக்கு ரூ.52.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதன் பின்னா் அவா் பேசியதாவது: பொதுமக்களின் குறைகளை உடனடியாகத் தீா்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாதந்தோறும் ஒரு வருவாய் வட்டத்தில் மக்கள் தொடா்பு முகாம் நடத்தப்படுகிறது.

அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், பொதுமக்கள் மனுக்களை வழங்க அரசு அலுவலகங்களைத் தேடி வருவதைத் தவிா்க்கும் வகையிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் பெறப்படும் மனுக்களைத் தொடா்புடைய அரசு துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து தகுதியான நபா்களுக்கு அரசின் நலத் திட்டங்களை வழங்குவா்.

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களில் பாதிக்கக்கட்டவா்களின் இல்லங்களுக்கேச் சென்று மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

மேலும், படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது என்றாா்.

இந்த முகாமில், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சாா்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் முதியோா் மற்றும் இதர உதவித் தொகையும், 50 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள், மகளிா் திட்டத்தின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.32.70 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 172 பயானிகளுக்கு 52.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியன், மாநகாட்சி 1 ஆவது மண்டலத் தலைவா் உமாமகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வாசுகி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT