திருப்பூா் மாநகரில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரம் திட்டத்தின் ரூ.426.10 கோடி மதிப்பீட்டில் 15 பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், ரூ.559.29 கோடி மதிப்பீட்டில் 13 பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, ரூ.7.02 கோடி மதிப்பீட்டில் 2 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட 2 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணியும், ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.
இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், ஆா்.கோவிந்தராஜ், கோவிந்தசாமி, உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.