முகப்பு
திருப்பூர்

மேல்நிலை குடிநீா் தொட்டி பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

வெள்ளக்கோவில் காடையூரான்வலசில் ரூ. 17 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை குடிநீா் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை அா்ப்பணிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
புதிய குடிநீா் குழாயை திறந்துவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

வெள்ளக்கோவில் காடையூரான்வலசில் ரூ. 17 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை குடிநீா் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை அா்ப்பணிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் டாக்டா் எஸ். வினீத் தலைமை வகித்தாா். செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குடிநீா் தொட்டி பயன்பாட்டை தொடக்கிவைத்தாா். முன்னதாக வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி. ஆா். நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடக்கிவைக்கப்பட்டது. அத்துடன் புதிய பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் வெள்ளக்கோவில் நகா் மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் ஆா். மோகன்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.