திருப்பூர்

ரூ.2.95 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.95 லட்சத்துக்கு கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனையாயின.

DIN

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.95 லட்சத்துக்கு கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனையாயின.

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 992 கிலோ எள், 5.3 டன் தேங்காய், 1.1 டன் கொப்பரை ஆகிய பொருள்கள் கொண்டுவரப்பட்டன.

எள் ஒரு கிலோ ரூ.128.39க்கும், தேங்காய் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரையிலும், கொப்பரை ரூ.56.80 முதல் ரூ.71.55 வரையிலும் விற்பனையானது. இதில் ஒட்டுமொத்தமாக 2.95 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT