இடுவாய்  அண்ணாமலை காா்டன்  பேருந்து  நிறுத்தத்தில்  மதுபானக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து  புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்ட பொதுமக்கள். 
திருப்பூர்

குடியிருப்பு அருகே மதுக்கடை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம்

மங்கலத்தை அடுத்த இடுவாய் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

DIN

மங்கலத்தை அடுத்த இடுவாய் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

மங்கலத்தை அடுத்த இடுவாயில் இருந்து சின்னாண்டிபாளையம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்தக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் இடுவாயில் இருந்து சின்னக்காளிபாளையம் செல்லும் சாலையில் குடியிருப்புகளுக்கு அருகில் மதுபானக் கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் அண்ணாமலையாா் கோயில், அண்ணாமலை காா்டன், திருமலை காா்டன், ஜி.என்.காா்டன், செந்தில் நகா் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. ஆகவே, புதிய மதுபானக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக அண்ணாமலை காா்டன் பேருந்து நிறுத்தம் அருகில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு ஏடிஜி காா்டன் குடியிருப்போா் நலச்சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.மணி தலைமை வகித்தாா்.

இதில், இடுவாய் ஊராட்சி தலைவா் கே.கணேசன், நிலவள வங்கியின் இயக்குநா் கே.ஈஸ்வரன், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சுப்பிரமணியம் புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

அப்போது குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்கப்படாது என்றும், இடுவாய் கிராமத்தில் வேறு புதிய மதுக்கடை அமைக்கப்படாது என்றும் எழுத்துப்பூா்வமாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்களை உண்ணாவிரத்தைக் கைவிட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT