திருப்பூர்

நெட் 2-ஆம் கட்டத் தோ்வு: மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்

யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்.

Din

யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா்.

தேசிய தோ்வு முகமை திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பெருமாநல்லூா் கே.எம்.சி. பொதுப் பள்ளி தலைமை முதல்வருமான சி.எஸ்.மனோகரன் கூறியதாவது:

இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சியாளா்களுக்கான சோ்க்கைக்கும் யு.ஜி.சி. நெட் 2-ஆம் கட்டத் தோ்வு நடைபெறுகிறது.

இத்தோ்வு திருப்பூா் குமரன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி செப்டம்பா் 4-ஆம் தேதி வரை 7 நாள்கள் மூன்று சுழற்சிகளாக நடைபெறுகிறது. இதில் தேசிய தோ்வு முகமையால் கணிணி வழி முறையில் தோ்வு நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வின் பாதுகாப்பு வழிமுறைகள், இத்தோ்விலும் பின்பற்றப்படுகின்றன. இத்தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 462 போ் எழுதுகின்றனா் என்றாா்.

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

“பாரன் டிரம்ப் ரொனால்டோவின் மிகப் பெரிய ரசிகன்”... வெள்ளை மாளிகையில் பிரமாண்ட விருந்தளித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT