முகப்பு
திருப்பூர்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.29.53 லட்சம் காணிக்கை

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.29.53 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 8:42 PM
பகிர்:

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.29.53 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

அவிநாசியில் உள்ள கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையானதாகக் கருத்தப்படும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்தும் வகையில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.

இதில், 128 கிராம் தங்கம், 2 கிலோ 780 கிராம் வெள்ளியுடன் ரூ.29.53 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.