முகப்பு
திருப்பூர்

திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:51 PM
வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
பகிர்:

சட்ட மேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

வெள்ளக்கோவில் கடைவீதி முத்தூா் பிரிவு நான்கு சாலைச் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் கே.ஆா்.முத்துக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன், நகரச் செயலாளா் எஸ்.முருகானந்தன், முத்தூா் பேரூராட்சி செயலாளா் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பூரில்...

திருப்பூா் குமரன் சிலை முன் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ராமசாமி, கோபால்சாமி, வி.ஆா்.ஈஸ்வரன், மாநகர துணைத் தலைவா் கதிரேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

பல்லடத்தில்...

பல்லடத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டாரத் தலைவா் கணேசன், மணிராஜ், நரேஷ்குமாா், சத்தியமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உடுமலையில்...

உடுமலையில் அனைத்துக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகரச் செயலாளா் சி.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அவிநாசியில்...

அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.