மாவட்ட அளவிலான கராத்தே போட்டி:பெரியாயிபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் சாம்பியன்
திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் வென்றனா்.
திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் வென்றனா்.
மாவட்ட அளவிலான கராத்தே போட்டி திருமுருகன்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவியா் பங்கேற்றதில், பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கும், பயிற்சி ஆசிரியா்கள் சசிகுமாா், அவிநாசிலிங்கம் ஆகியோருக்கு தலைமையாசிரியா் வி.குமேரசன், பள்ளி வளா்ச்சி குழுத் தலைவா் கே.அண்ணாத்துரை, பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.