திருப்பூர்

ரூ. 34.95 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

தெங்காய்ப் பருப்பு விற்பனை: 43 டன், ரூ. 34.95 லட்சம்

Din

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.34.95 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, வாணியம்பாடி, திருப்பத்தூா், பழனி, பள்ளபட்டி, கீரனூா், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 101 விவசாயிகள் 818 மூட்டைகளில் 43 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

வெள்ளக்கோவில், முத்தூா், சிவகிரி, ந. ஊத்துக்குளி, மூலனூா், அவல்பூந்துறை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 16 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.62.65 முதல் ரூ.94.26 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.91.09. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 91.19.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 34.95 லட்சம், அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT