முகப்பு
திருப்பூர்

குடிநீா் விநியோகப்பாளா்களுக்கு பயிற்சி

பல்லடம் அருகே குடிநீா் விநியோகப் பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:31 PM
பகிர்:

பல்லடம் அருகே குடிநீா் விநியோகப் பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி தலைமை வகித்தாா்.

இதில், குடிநீரி விநியோகப் பணியாளா்களுக்கு குடிநீா்த் தொட்டி பராமரிப்பு, குளோரினேற்றம் மற்றும் சுகாதாரப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கந்தசாமி, சுகாதார ஆய்வாளா் ராகுல்ராஜா ஆகியோா் பயிற்சியளித்தனா்.