முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

வெள்ளக்கோவில் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:39 PM
குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

வெள்ளக்கோவில் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் கனியரசி முத்துக்குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளா் ஈ.பரிமளா சிறப்புரையாற்றினாா்.

இந்தக் கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளா், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், சட்டத்துக்குப் புறம்பாக தத்து கொடுத்தல், பெண் சிசுக் கொலை, தீண்டாமை ஒழிப்பு குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், குழந்தை பிறப்பு பதிவு, ஆதாா் பதிவு, பள்ளியில் சோ்த்தல், தடுப்பூசி செலுத்துதல், பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயா்த்துதல் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில், வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.