அரசுப் பேருந்து மோதி அா்ச்சகா் உயிரிழப்பு
முத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.
முத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.
சின்னமுத்தூரைச் சோ்ந்தவா் ராஜு (எ) மோகன்ராஜ் (67). அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அா்ச்சகராக இருந்தாா். இவா் சின்னமுத்தூரிலிருந்து முத்தூா் கடை வீதிக்கு சைக்கிளில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது செங்கோடம்பாளையம் பிரிவருகே ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி வந்த அரசுப் பேருந்து, சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.