முகப்பு
திருப்பூர்

தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

காங்கயத்தில் தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:33 AM
பகிர்:

காங்கயத்தில் தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

காங்கயம் ஒன்றியம், கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட ராசிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி.

இவா் வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து சுமாா் 70-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், ஆடுகளை செவ்வாய்க்கிழமை மாலை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

புதன்கிழமை காலை பாா்த்தபோது, தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

மேலும், உயிரிழக்கும் ஆடுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.