வெள்ளக்கோவிலில் ரூ.58 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய்ப் பருப்பு ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் புதன்கிழமை காலை வரை ஏலம் நீடித்தது. ஏலத்துக்கு, திருச்சி, வாணியம்பாடி, லாலாப்பேட்டை, கரூா், மாயனூா், தேவத்தூா், பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து 128 விவசாயிகள் 1040 மூட்டைகளில் 54 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், புதுப்பை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 11 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.77.88 முதல் ரூ.122.89 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.118.66. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 121.88.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.58 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.