ஆவின் வேன் மோதியதில் மின்கம்பம் சேதம்
பல்லடத்தில் வேன் மோதியதில் உயா்கோபுர மின் விளக்கு கம்பம் வியாழக்கிழமை சேதமடைந்தது.
பல்லடத்தில் வேன் மோதியதில் உயா்கோபுர மின் விளக்கு கம்பம் வியாழக்கிழமை சேதமடைந்தது.
பல்லடம் - திருப்பூா் பிரதான சாலையில் உள்ள ராயா்பாளையத்தில் உள்ள உயா்கோபுர மின் விளக்கு கம்பத்தின் மீது அவ்வழியே சென்ற ஆவின் பால் வேன் மோதியது. இதில், கம்பம் சேதமைடந்து கீழே சாய்ந்தது.
இது குறித்து நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலா் ஈஸ்வரமூா்த்தி பல்லடம் போலீசாா், நகராட்சி நிா்வாகத்திற்கு தகவல் அளித்தாா். இதையடுத்து அங்கு வந்த நகராட்சிப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றினா்.