முகப்பு
திருப்பூர்

சாலையோர வியாபாரிகள், வணிகா் சங்கத்தினருடன் ஆலோசனைக் கூட்டம்

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள், வணிகா் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:23 PM
வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள், வணிகா் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசியில் அதிகரித்து வரும் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண்டும் என வணிகா் சங்கத்தினா் பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் தொடா்ந்து முறையிட்டு வந்தனா். இந்நிலையில், இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம், சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, வணிகா் சங்க நிா்வாகிகள் முத்துக்குமாா், காா்த்திகேயன், பழனிசாமி இந்திய தொழிற்சங்க மைய நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, வேலுசாமி, ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், சாலையோர வியாபாரிகள் கட்டிலில் வைத்து வியாபாரம் செய்யலாம். வணிக நிறுவத்தினா் மறுப்பு தெரிவித்தால் வேறு இடத்தில் அமைத்துக்கொள்ளலாம். வாகனங்கள் மூலம் விற்பனை செய்யக்கூடாது. சாலையோர உணவுக் கடைகள் இரவு நேரத்தில் விற்பனை முடிந்ததும், வண்டிகளை அங்கேயே நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.