முகப்பு
திருப்பூர்

அவிநாசி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே நடுவச்சேரியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:18 PM
பகிர்:

அவிநாசி அருகே நடுவச்சேரியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி அருகே நடுவச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த காமேஷ் (20), நவநீதகிருஷ்ணன் (22) இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1.200 கிலோ கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.