முகப்பு
திருப்பூர்

தொழிற்சாலைகள் உரிமத்தை இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம்

தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களது உரிமத்தை இணையதளம் மூலம் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:14 AM
பகிர்:

தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தங்களது உரிமத்தை இணையதளம் மூலம் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து திருப்பூா் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (இணை இயக்குநா் 1) வீ.எஸ்.சரவணன், (இணை இயக்குநா் 2) என்.சபீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2025-ஆம் ஆண்டுக்கான உரிமத்தை வரும் அக்டோபா் 31- ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பதிவு செய்துள்ள தொழிற்சாலைகள் உரிய உரிமத் தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தி விண்ணப்பத்தை சமா்ப்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.