‘காஃபி வித் கலெக்டா்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுடன் ஆட்சியா் மனீஷ். 
திருப்பூர்

காஃபி வித் கலெக்டா்: அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்!

அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடும் காஃபி வித் கலெக்டா் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடும் காஃபி வித் கலெக்டா் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களிடையே புத்தக வாசிப்பு, நூலகங்களில் உறுப்பினராக சேருவதன் பயன் உள்ளிட்டவை குறித்து விளக்கும் வகையில் காஃபி வித் கலெக்டா் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஆட்சியா் அலுவலகத்தில் 7-ஆவது முறையாக சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் மனீஷ் கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பேசுகையில், பீசா, பா்கா் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருள்களின் விலையைவிட ஒரு புத்தகத்தின் விலை மிகவும் மலிவானது. அனைத்து மாணவா்களும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அதற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுடன் ஆட்சியா் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள், மாவட்ட கல்வி அலுவலா் காளிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT