திருப்பூர்

தற்கொலைக்கு முயன்ற வட மாநில பெண்: கோவையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

Syndication

வெள்ளக்கோவில் அருகே தற்கொலைக்கு முயன்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வட மாநில பெண் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி திபு (28), ரேணு (25). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தற்போது வெள்ளக்கோவில் அருகே கொங்கு நகரில் தங்கி இருவரும் கட்டட வேலைக்கு சென்று வந்தனா்.

கடந்த 4-ஆம் தேதி வீட்டில் இருந்த ரேணு, தனது ஆண் நண்பரிடம் கைப்பேசியில் வீடியோ காலில் பேசியுள்ளாா். இதுதொடா்பாக கணவா் கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் சேலையால் ரேணு தூக்கிட்டுள்ளாா். சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அவா் மீட்கப்பட்டு, வெள்ளக்கோவில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT