முகப்பு
திருப்பூர்

முத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

முத்தூா் அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:13 AM
பகிர்:

முத்தூா் அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முத்தூா் ந. கரையூரில் பயன்பாடு இல்லாத பொதுக் கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வியாழக்கிழமை மிதந்து கொண்டிருந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வெள்ளக்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தவா் யாா், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.