காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) திங்கள்கிழமை ஏலம் போனது.
காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை ஏல முறையில் திங்கள்கிழமை விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 178 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ ரூ.221-க்கும், குறைந்தபட்சமாக ரூ.141-க்கும், சராசரியாக ரூ.220-க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.