திருப்பூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த கலைத் திருவிழா நவம்பா் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வட்டார அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவா்களில் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கலைத் திருவிழா நடைபெறுகிறது.