திருப்பூர்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: குடிநீா் விநியோகம் 10 நாள்களுக்கு நிறுத்தம்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால், திருப்பூரில் 2-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும்

Syndication

திருப்பூா்: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால், திருப்பூரில் 2-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 11) முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2, 3, மற்றும் 4-ஆவது குடிநீா் திட்டங்களின் மூலமாக குடிநீா் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குடிநீா்க் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருவதால், 2-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் செவ்வாய்க்கிழமை முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

இதேபோல, 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

SCROLL FOR NEXT