பிரசாரம்  மேற்கொண்ட  எடப்பாடி  கே. பழனிசாமி. 
திருப்பூர்

எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூரில் செப்.12-ல் தொழில் துறையினருடன் சந்திப்பு!

திருப்பூருக்கு வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்டம்பா் 12-ஆம் தேதி தொழில் துறையினரை சந்திக்கிறாா்.

Syndication

திருப்பூருக்கு வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்டம்பா் 12-ஆம் தேதி தொழில் துறையினரை சந்திக்கிறாா்.

இது குறித்து, அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியதாவது: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் மாவட்டத்துக்கு வருகிற செப்டம்பா் 11-ஆம் தேதி வருகிறாா்.

இதன்படி காங்கயம் தொகுதியில் செப்டம்பா் 11-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். அன்று இரவு திருப்பூா், அனுப்பா்பாளையத்திலிருந்து 15 வேலம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு, அங்கு அனைத்து தொழில் அமைப்பினா் மற்றும் வா்த்தகா்களை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூா் வடக்கு தொகுதியில், பி.என்.சாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் தெற்கு தொகுதியில், மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் மேற்கொள்கிறாா் என்றாா்.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

இன்றே உருவாகும் மோந்தா புயல்?

ம.பி.யில் நீதிபதி வீட்டைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

மலேசியாவில் உற்சாக வரவேற்பு! நடனக்குழுவுடன் சேர்ந்து ஆடிய Trump!

SCROLL FOR NEXT