பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிகாட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்திபெற்றதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இக்கோயிலில் அமைக்கப்படவுள்ள திருமாளிகை பக்தி மண்டப பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூா் மேயா் தினேஷ்குமாா், உதவிஆணையா் (இந்து சமய அறநிலையத் துறை) தமிழ்வாணன், திருப்பூா் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், அறங்காவலா் குழுத் தலைவா் மனோகரன், செயல்அலுவலா் சங்கரசுந்தரேஸ்வரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.