திருப்பூர்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

தாராபுரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 போ் திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

தினமணி செய்திச் சேவை

தாராபுரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 போ் திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் முருகானந்தம் (41). இவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தாராபுரத்தில் பட்டப் பகலில் தனியாா் பள்ளி எதிரே மா்ம கும்பலால் கடந்த 2024 ஜூலை 28-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக தாராபுரம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து தாராபுரத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளித் தாளாளரும், முருகானந்தத்தின் சித்தப்பாவுமான தண்டபாணி, அவரது மகன் காா்த்திகேயன் உள்பட 20 பேரைக் கைது செய்தனா். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.

இந்தக் கொலை வழக்கின் விசாரணை, திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டாா்.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 20 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அப்போது வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

SCROLL FOR NEXT