முகப்பு
திருப்பூர்

பருவாய் கிராமத்தில் சமத்துவப் பொங்கல் விழா: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பூர்

பருவாய் கிராமத்தில் சமத்துவப் பொங்கல் விழா: ஆட்சியா் பங்கேற்பு

Updated On : 14 ஜனவரி, 2026 at 8:40 PM
பகிர்:

பல்லடம் அருகே பருவாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டாா்.

இவ்விழாவில் பொங்கல் வைத்தும், கும்மி அடித்து நடனம் ஆடியும், உறியடி போட்டியில் கலந்து கொண்டும், பாரம்பரிய மாட்டு வண்டியில் ஆட்சியா் குடும்பத்துடன் பயணமும் மேற்கொண்டாா்.

மேலும் கோலம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் பரிசுகளை வழங்கினாா்.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கமித்திரை, மகளிா் திட்ட அலுவலா் சாந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சதீஷ்குமாா், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தா்மா், நீலவேணி, ஊராட்சி செயலாளா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →