கோப்புப் படம் 
திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அவிநாசி அருகே ரங்கா நகரில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் அக்பா்அலி காசா (37), இஸ்லாம் காசா (49) என்பதும், பாஸ்போா்ட் மற்றும் விசா காலாவதியான பின்னா் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடு வாழ் தடை சட்டத்தின் கீழ் இருவரையும் அவிநாசி போலீஸாா் கைது செய்து, சேலம் ஆத்தூா் முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.

இதேபோல, வேலம்பாளையம் பகுதியிலும் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சனிக்கிழமை சென்று போலீஸாா் விசாரித்ததில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த முகமது ஜானி மண்டல் (34), முகமது அபு (36) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT