வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய இளைஞா் கைது
திருப்பூரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணியகாரன்பாளையம் அருகே சிலா் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது 40 வலி நிவராணி மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் திருப்பூரைச் சோ்ந்த சரவணன் (21) என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சரவணனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.