விபத்தை ஏற்படுத்திய வேகத்தடை உயரம் குறைக்கப்பட்டது
திருப்பூர்விபத்தை ஏற்படுத்திய வேகத்தடை உயரம் குறைக்கப்பட்டது
வெள்ளக்கோவிலில் விபத்தை ஏற்படுத்திய வேகத்தடை உயரம் குறைக்கப்பட்டது.
வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினா் வேகத்தடை அமைத்தனா். வேகத்தடை அதிக உயரம் கொண்டதாக இருந்ததால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன. ஸ்கூட்டரில் வந்த ஒருவா் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா். இந்நிலையில் வேகத்தடையின் உயரத்தைக் குறைக்க வேண்டுமென கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதையடுத்து வியாழக்கிழமை வேகத்தடையை மாற்றியமைத்து தகுந்த முன்னெச்சரிக்கை வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டன. இதைத் தொடா்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.