குற்றச் செயல்களில் தொடா்புடைய 34 போ் கைது
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டத்தில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவோா், காவல் நிலையங்களில் ரௌடிகளின் பெயா் பட்டியலில் இருப்போா், பொதுமக்களுக்கு இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் உத்தரவிட்டாா்.
இதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் மாவட்டத்தில் தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.