முகப்பு
தருமபுரி

சின்னாறு அணையில் விடப்பட்ட50 ஆயிரம் இறால் மீன் குஞ்சுகள்

மீன் வளத்தை பெருக்கும் வகையில், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இறால் மீன் குஞ்சுகள் திங்கள்கிழமை விடப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

மீன் வளத்தை பெருக்கும் வகையில், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இறால் மீன் குஞ்சுகள் திங்கள்கிழமை விடப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியிலுள்ள சின்னாறு அணை, நாகாவதி அணை ஆகிய இரண்டு நீா்த் தேக்கங்களும் நன்னீா் இறால் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்க மீன் வளத்துறை சாா்பில் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை பஞ்சப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், சின்னாறு அணையில் 50,000 இறால் மீன் குஞ்சுகளை விடும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

தருமபுரி கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை, பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.ரங்கநாதன், மீன்வளத் துறை உதவி இயக்குநா் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலத்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.