தருமபுரி

முதியவா் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

பென்னாகரம் அருகே மது போதையில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம் அருகே உள்ள நாகனூா் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (65). இவரது குடும்பத்தினா் ஈரோட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனா். சுகுமாா் மட்டும் தனியாக வசித்து வந்தாா்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் மதுபோதையில் வீட்டில் தூக்கிட்டு சுகுமாா் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பென்னாகரம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

SCROLL FOR NEXT