கோப்புப் படம் 
தருமபுரி

இண்டூா் அருகே தொழிலாளி தற்கொலை

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (30). கட்டடத் தொழிலாளியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தாய் வீட்டிற்கு சென்ற இவரது மனைவி திரும்பிவரவில்லையாம்.

இந்த நிலையில் தட்சிணாமூா்த்தி சனிக்கிழமை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அரசு தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி புயான்

ஹாட் ஸ்பாட் 2

வாக்காளா் சோ்க்கைக்கு இன்று சிறப்பு முகாம்கள்

குடியரசு தினம்: ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்

குடியரசு தினம்: ரயில் நிலையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவு

SCROLL FOR NEXT