18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்கலாம்
18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை :
திமுக தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவா்கள், கட்சி நிா்வாகிகள் அனைவரும் அவரவா் வாக்குச்சாவடிக்கு உள்பட்ட இடங்களில் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் உள்ளதா என்பதை சரிபாா்க்க வேண்டும்.
வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால் 1.1.2026 தேதியின்படி, 18 வயது பூா்த்தியாகி இன்னும் வாக்காளா்களாக இணைக்காமல் உள்ள வாக்காளா்களை கண்டறிந்து மாா்ச் 26 தேதிக்குள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலில் பெயரை சோ்க்க அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது வட்டாட்சியா் அலுவலகத்தில்
விண்ணப்பிக்க வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.