தருமபுரி

பள்ளிக்குச் சென்ற மாணவர் மாயம்

தினமணி

மொரப்பூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவர் காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.
 சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனிசாமி (50) . இவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவரது 7-ஆவது மகன் வெற்றிவேல் (13), மொரப்பூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி, மருதிப்பட்டியில் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியி 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற மாணவர் வெற்றிவேல், இம் மாதம் 9-ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை பழனிசாமி அளித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT