தருமபுரி

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

தினமணி

தருமபுரி பழைய குடியிருப்புப் பகுதியில் கடந்த 2012-இல் மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
தருமபுரி பழைய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் (42), அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி பூங்கொடி (35), கூன்மாரிக்கொட்டாய் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை. 2000-ஆம் ஆண்டில் இவர்களுக்குத் திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது பிரசவக் கால விடுமுறையில் பூங்கொடி வீட்டில் இருந்தபோது, கடந்த 2012 அக்டோபர் 16-ஆம் தேதி மாலை வீட்டுக்கு வந்த கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, சிவானந்தம் தனது மனைவி பூங்கொடியின் முகத்தில் குத்தி, கழுத்தை நெறித்துள்ளார். இதில் பூங்கொடி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிவானந்தத்தைக் கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிவானந்தத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT