தருமபுரி

கடத்தூர் கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

DIN

தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் பாவலர் கோ.மலர்வண்ணன் தலைமை வகித்தார்.  கிளை நூலகர் சி.சரவணன் வரவேற்றார். தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சி.சந்திரசேகர்,  பாரதியின் உருவப்படத்தை திறந்து வைத்துப் பேசினார். 
கடத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழாவில்,  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து,  மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கடத்தூர் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை இந்திரா காந்தி, புலவர் நெடுமிடல், ஆசிரியைகள் நிர்மலா, லீலா நூலகர் கி.நீலமேகன் மற்றும் வாசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT