தருமபுரி

கல்லூரி மாணவி கடத்தல்: போக்ஸோசட்டத்தில் ஓட்டுநர் கைது 

தருமபுரி அருகே கல்லூரி மாணவியைக் கடத்தியதாக, ஓட்டுநர் போக்ஸோசட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

DIN

தருமபுரி அருகே கல்லூரி மாணவியைக் கடத்தியதாக, ஓட்டுநர் போக்ஸோசட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
 தருமபுரி அருகே 17 வயது மாணவி ஒருவர் அரசுக் கல்லூரியில முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஆக. 21-ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மத்தாளப்பள்ளத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சக்தி (27) என்பவர் மாணவியைக் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவியை மீட்ட போலீஸார், சக்தியை போக்ஸோசட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT