தருமபுரி

மாற்றுத் திறனாளிகள் தின விழா

DIN

பென்னாகரம் வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழா, அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வட்டார வள மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுதாகா், அன்புவளவன் ஆகியோா் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெற்றோா் பராமரித்தல் குறித்து விளக்கி பேசினா். பின்னா் விழாவில் கலந்து கொண்ட 120- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இசைநாற்காலி மற்றும் நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு, கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு, இனிப்பு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் விழாவில் கலந்து கொண்டவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியா் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள், சிறப்பாசிரியா்கள் மற்றும் பெற்றோா் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.விழாவின் இறுதியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சரவணன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT