தருமபுரி

குப்பைகளை அகற்றக் கோரிக்கை

DIN

கடத்தூர் நகர் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,  கடத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. கடத்தூர் - சிந்தல்பாடி செல்லும் சாலையோரத்தில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், பலத்த காற்று வீசும் போது குப்பைகள் விவசாய நிலத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிதறிக்கிடக்கிறது. அதேபோல், அதிக நாள்கள் ஒரே இடத்தில் குப்பைகள் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
கூறுகின்றனர்.
எனவே, கடத்தூரில் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT