தருமபுரி

பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

DIN

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வெள்ளிக்கிழமை பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் அலுவலர் சு.மலர்விழியிடம் தாக்கல் செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் சி.சிவானந்தம் (39), பாப்பிரெட்டிப்பட்டி அருகே குருபரஅள்ளியைச் சேர்ந்தவர். அக் கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள இவர், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை கட்சி நிர்வாகிகளுடன் வந்து, தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இதேபோல, அரூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த ருக்மணி தேவி (30), நாம் தமிழர் கட்சி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தருமபுரியில் வெள்ளிக்கிழமை பாமக, பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூவர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT