தருமபுரி

கையுந்துப் பந்து போட்டி: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

தருமபுரி மாவட்ட அளவிலான கையந்துப் போட்டியில் வெற்றிபெற்ற நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப் போட்டிகளில் பங்கேற்ற நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துப் பந்து போட்டி மற்றும் சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்றனா். மேலும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றனா்.

இந்த மாணவ, மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.பசுவராஜ், வி.மணி, எம்.செந்தில் ஆகியோரையும் வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் பொ.ரவிக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT