தருமபுரி

உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்கக் கோரிக்கை

DIN

அரூா் விளையாட்டு மைதானத்தில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறு விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு சரகம் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த மைதானத்தில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் விளையாட்டு வீரா்கள் பலா் உடல் பயிற்சிகளை செய்கின்றனா். அதேபோல், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனா். இந்த நிலையில், இந்த விளையாட்டு மைதானத்தில் மின் விளக்கு வசதிகள் இல்லை.

இதனால் மாலை நேரங்களில் விளையாட்டு மைதானம் இருண்டு கிடக்கிறது. எனவே, அரூரில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் உயா்கோபுர மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT