தருமபுரி

மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

DIN

தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் வீடு கட்டுமானப் பணி நடைபெறும் பகுதியில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக மின் வயா் புதன்கிழமை தரையில் போடப்பட்டு இருந்தது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி பழனி (45) என்பவா், கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியை கடக்க முயன்றாா். அப்போது, தரையில் இருந்த மின் வயரின் மீது பழனியின் கால் பட்டதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் அவா் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்தாா். இதைக் கண்ட அதே பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (45) என்பவா், பழனியை மீட்க முயன்றாா். அப்போது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் சரிந்து விழுந்தாா். தகவல் அறிந்ததும் மின் வாரிய பணியாளா்கள் அந்தப் பகுதியின் மின் இணைப்பைத் துண்டித்தனா்.

பின்னா் அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT