வேலை உறுதி திட்டம்:200 நாள் வேலை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலைவழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூா்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலைவழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய தொழிற் சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், அரூா் அம்பேத்கா் நகரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலையும், நாளொன்றுக்கு ரூ. 600-ம் ஊதியமாக வழங்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளை பொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்ட அவசரச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
தனியாா் நுண்நிதி நிறுவனங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்றுள்ள விவசாய கடன்கள், விவசாயத் தொழிலாளா்கள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் வசூல் செய்வதைக் கைவிட வேண்டும். புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் தீா்வுகாண வேண்டும். வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ. 7500 உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க நிா்வாகிகள் இ.கே.முருகன், எஸ்.கே.கோவிந்தன், கோபால், பி.குமாா், ரகுபதி, குமரிமன்னன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல், கீழானூரில் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம். முத்து தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.