முகப்பு
தருமபுரி

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

அரூரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
அரூரில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

அரூரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா்-சேலம் பிரதான சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா் தலைமை வகித்தாா்.

விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் பொ.மு.நந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலா் மல்லிகா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரா.சிசுபாலன், வட்டக்குழு உறுப்பினா்கள் இ.கே.முருகன், பி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →